மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். எஸ்.எஸ்.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான, ''பராசக்தி'' படத்தில் தான் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். பூம்புகார், மறக்க முடியுமா போன்ற படங்கள் காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியங்கள். தனது எழுச்சி மிகு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு லட்சிய நடிகர் என்று பட்டமும் கொடுக்கப்பட்டது. நடிகராக மட்டுமல்லாது எம்.எல்.ஏ., மற்றும் எம்பி-யாகவும் இருந்துள்ளார்.
தற்போது 86 வயதாகும் எஸ்.எஸ்.ஆர்., கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த இருதினங்ளாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து, அவர் இன்று(அக்., 23ம் தேதி) சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.எஸ்.ஆரின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு நுரையீரல் தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இன்னும் 24 மணிநேரத்திற்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து டாக்டர்கள், எஸ்.எஸ்.ஆரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எஸ்.எஸ்.ஆர். மனைவி தாமரைச்செல்வி, மகன் கண்ணன் மற்றும் மகள் லட்சுமி ஆகியோர் அவரை உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.