ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை த்ரிஷா செல்ல பிராணிகள் வளர்ப்பதிலும், அதிலும் குறிப்பாக தெரு நாய்களை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் அக்கறை உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். செல்ல நாய்களுக்காக அவர் தீபாவளிக்கு பட்டாசுகூட வெடிப்பதில்லையாம். அவர் கூறியிருப்பதாவது: பொதுவாகவே தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது எனக்கு பிடிக்காது. அதுக்கு காரணம் பட்டாசால் காற்று மாசும், ஒலி மாசும் உண்டாகும். அதோடு என் செல்ல நாய்குட்டிகள் பட்டாசுக்கு பயப்படும். மனிதர்களை விட நாய்களுக்கு செவித் திறன் அதிகம். பட்டாசு சத்தம் நம்மை விட பல மடங்கு சத்தமாக நாய்களுக்கு கேட்கும். பண்டிகை என்பது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
தீபாவளியன்று வீட்டுக்குள்ளேதான் இருப்பேன். செல்ல நாய்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன். மாலையில் பட்டாசு சத்தம் குறைந்ததும் தோழிகள் வீட்டுக்கு கிளம்பி போய்விடுவேன். என்கிறார் த்ரிஷா.