'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உதயநிதி ஸ்டலின் தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் சென்னையில் நடந்து வந்தது. ஒரு பாடல் காட்சிக்காக நயன்தாராவுடன், உதயநிதி கடந்த வாரம் லண்டன் சென்றார். அங்குள்ள தெருக்களில் இருவரும் பாடி ஆடும் டூயட் பாடல் ஒன்றை படம் பிடித்தனர்.
படப்பிடிப்பு முடிந்து நேற்று முன்தினம் (அக் 18) அவர்கள் சென்னை திரும்பினர். இந்த பாடலோடு நண்பேன்டா படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெறுகிறது. இதற்கு பிறகு டப்பிங், எடிட்டிங் பணிகள் முடிந்து பின்னணி இசைக்காக ஹாரிஸ் ஜெயராஜிடம் படம் செல்லும். நண்பேன்டா படத்தில் உதயநிதியின் பணி முடிந்து விட்டதால் அடுத்து அகமது இயக்கும், 'இதயம் முரளி' படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படிப்பிடிப்புகள் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்திலிருந்து தொடங்குகிறது.