மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கவியரசர் கண்ணதாசன்-எம்.எஸ்.விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் கவியரசர் கண்ணதாசனின் 11ம் ஆண்டு விழா குமார ராஜா முத்தையா அரங்கில் நடந்தது. விழாவை குமாரராணி மீனா முத்தையா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இலக்கிய சிந்தனை ப.லட்சுமணன் தலைமை தாங்கி கவிஞர்கள் அரு.நாகப்பன், கயல் தினகரன் ஆகியோருக்கு கவியரசர் விருது வழங்கினார்.
விருது பெற்றவர்களை பாராட்டி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசினார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கவியரசரின் பாடல்களும், எனது பாமாலைகளும் என்ற தலைப்பில் பேசினார். பின்னர் கவியரசரின் பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். அறக்கட்டளை தலைவர் எம்.எஸ்.விஸ்வநாதன் வரவேற்றார். முடிவில் ஏ.நாகப்பன் நன்றி கூறினார். விழாவில் அறக்கட்டளை செயலாளர் ஏவிஎம்.சரவணன், நல்லி குப்புசாமி, முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.