'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் நடித்துள்ள கத்தி படம் தீபாவளி அன்று திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டு விட்டது. படத்தின் ஆடியோ மற்றும் செல்பி புள்ள பாடலை வெளியிட்டவர்கள். முன்பாக படத்தை சென்சார்போர்டுக்கு அனுப்பி யு சான்றிதழை பெற்று விட்டனர்.
அதோடு, கத்தி படத்தின் டிக்கெட் புக்கிங்கையும் நேற்று முதல் ஆரம்பித்து விட்டார்கள். நேற்றைய தினம் விளம்பரங்கள் வெளியானதை அடுத்து தமிழகமெங்கிலும் கத்தி வெளியாகும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டனர். அதனால் புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட சில ஏரியாக்களில் டிக்கெட் கவுண்டரை திறந்த சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாம்.
இதற்கிடையே, கத்தியை வாங்கியிருக்கும் தியேட்டர்காரர்களும் ஐங்கரன் பிலிம்சில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில், ஏற்கனவே சில அரசியல் கட்சிகளும் சில அமைப்புகளும் கத்தி திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பு போராட்டங்களை நடத்துவோம் என்று அறிவித்திருப்பதால், அதை தடுத்து நிறுத்தும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் நேற்று சென்னையில் போலீஸ் கமிஷனரை சந்தித்து கத்தி படத்துக்கு பாதுகாப்பு தருமாறு மனு கொடுத்துள்ளாராம் கருணா மூர்த்தி.