ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பசங்க படத்திற்கு பிறகு குழந்தைகளை மையமாக கொண்ட சினிமாக்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. கோலிசோடா பெரிய வெற்றி பெற்றது. சமீபத்தில் புதியதோர் உலகம் செய்வோம் என்ற படம் வெளிவந்தது. தற்போது கத சொல்லப் போறோம் என்ற படம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எஸ்.கல்யாண் என்பவர் தயாரித்து இயக்குகிறார். ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த், அரவிந்த், ராகுல், சாமு, அர்ஜுன் என்ற குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அவர்களுடன் ஆடுகளம் நரேன். காளி வெங்கட், பசங்க சிவகுமார் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
படத்தை பற்றி இயக்குனர் எஸ்.கல்யாண் கூறியதாவது: முதல் படமாக குழந்தைகள் படத்தை இயக்குவது ஆபத்தானது என்பார்கள். நான் துணிச்சலுடன் இயக்குகிறேன். காரணம் இதற்கு முன்பு 6 குழந்தைகள் பற்றிய குறும்படம் இயக்கிய அனுபவம் இருக்கிறது.
குழந்தைகள் பற்றி நிறைய படங்கள் வந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் சென்மென்ட் பற்றி வரவில்லை. இது குழந்தைகளின் சென்டிமென்ட் பற்றிய கதை. ஒரு அநாதை இல்லக் குழந்தைகளுக்கும், அருகில் வசிக்கும் பணக்கார குழந்தைகளுக்கும் இடையே உள்ள நட்பு, பாசம் பற்றி பேசும் படம். அதோடு குழந்தைகள் கடத்தல் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலையும் படத்தில் பதிவு செய்கிறோம். என்கிறார் இயக்குனர் எஸ்.கல்யாண்.