'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் முதலில் மகேஷ்பாபு, நாகார்ஜூனா ஆகியோர் நாயகர்களாக நடிப்பதாக இருந்தது. அதையடுத்து, இப்போது துல்கர் சல்மான் நடிப்பதாகவும் அதன் படப்பிடிப்பு அக்டோபர் 6-ந்தேதி முதல் தொடங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தேஜாவிடமும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாக தற்போது இன்னொரு செய்தி பரவியிருக்கிறது. ஆனால், கதையைக் கேட்ட ராம்சரண், தான் எதிர்பார்க்கிற கமர்சியல் போர்ஷன் குறைவாக இருந்ததால் நடிக்க மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.
இதுபற்றி ராம்சரண் வெளியிட்டுள்ள செய்தியில், எனது பேவரிட் டைரக்டர்களில் மணிரத்னமும் ஒருவர். அவர் படங்களை ரொம்பவே ரசித்திருக்கிறேன். அதனால் நேரம் வரும்போது அவருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் இருந்து வந்தது. அதனால் அவர் என்னை அழைத்தபோது ரொம்ப சந்தோசப்பட்டேன்.
ஆனால், அவர் சொன்ன கதையில் வியாபார நோக்கததை விட விருதுக்கான நோக்கம்தான் அதிகமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை என்னை நம்பி பணம் போடும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் முக்கியம் என்று நினைப்பேன். அவர்கள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன். அதனால்தான் அந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ள ராம்சரண், எதிர்காலத்தில் கமர்சியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்க மணிரத்னம் அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.