கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
நடிகர் அர்ஜுன் தற்போது அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2 படத்தைத் தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் இந்தப் படம் வெளிவர உள்ளது. இதனிடையே தெலுங்கின் பிரபல இயக்குனரான த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் தற்போது கன்னட நடிகரான உபேந்திரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கன்னடத் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் உள்ள உபேந்திரா பல வெற்றிப் படங்களை இயக்கி, நாயகனாக நடித்தும் உள்ளார். தற்போது கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உபேந்திரா தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் விஷால், நயன்தாரா நடித்து வெளிவந்த 'சத்யம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கும் புதிய படத்தில் அல்லு அர்ஜுனுடன் நடிக்க சமந்தா, அடா சர்மா ஒப்பந்தமாகியுள்ளனர். சினேகாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்திற்குப் பிறகு த்ரிவிக்ரம் இயக்க உள்ள இந்தப் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.