தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
32 வயதாகும் அனுஷ்கா தற்போதும் பிசிதான். 4 மெகா படங்களில் இரவு பகலாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது அவரது முகத்தில் முதிர்ச்சி தென்படுகிறதாம். குறிப்பாக, சரியான தூக்கம் இன்றி நடித்தால் மறுநாள் மேக்கப் போட்டாலும் முகம் பளிச்சிடுவதில்லையாம். அதனால் அவர் நடிக்கும் காட்சிகளில் க்ளோசப் ஷாட் வைக்கவே கேமராமேன்கள் அஞ்சுகிறார்களாம்.
தெலுங்கில் அவர் நடிக்கும் ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி படங்களில் சரித்திர கதாபாத்திரம் என்பதால் மெச்சூரிட்டியான முகம் தேவைப்பட்டதால் முதிர்ச்சியைப்பற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லையாம். ஆனால், கெளதம்மேனன் படத்தில் நடித்தபோது பழைய கிளாமர் முகத்தில் இல்லையே என்று கேமராமேனின் காது கடித்தாராம் கெளதம்.
அதையடுத்து, இந்த விசயத்தை முகத்தில் அடித்தார் போல் சொன்னால் பீல் பண்ணி விடுவார் என்பதற்காக, சமயம் பார்த்து அனுஷ்காவிடம் நாசுக்காக சொல்லி புரிய வைத்தார்களாம். அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்ட அனுஷ்கா, இப்போது தனது முகத்தில் இளமையை கொண்டு வரும் யோகா பயிற்சிகளில் அதிகமாக ஈடுபடுகிறாராம். அதோடு, படப்பிடிப்புக்காக அவரை அழைத்து வந்தாலும், அவருக்கு நல்ல ஓய்வு கொடுத்த பின்னரே கேமரா கண்களுக்கு முன்பு அனுஷ்காவை அழைத்து வருகிறாராம் கெளதம்மேனன்.