ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தின் ஆடியோ விழா இன்று சென்னையில் நடக்கிறது. தனியார் டிவி ஒன்று, விழாவின் ஒளிபரப்பு உரிமத்தையும் படத்தையும் வாங்கி உள்ளது. இதனிடையே கத்தி படத்திற்கு தமிழ் அமைப்புக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், விழா நடைபெறும் அரங்கில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில், பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரமுகர்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் கூறுகையில்,
நடிகர் விஜய் நடித்துள்ள 'கத்தி' படத்தை, இலங்கை அதிபர் ராஜபக்சேயின் குடும்ப நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. தமிழர்களின் விரோதியான ராஜபக்சேயின் குடும்ப நிறுவனம் தயாரிக்கும் படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம். நடிகர் விஜய்யோ, இயக்குனர் முருகதாசோ, இந்த படத்தை தயாரித்து வெளியிடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இந்த படம் வெளிவருவதை எங்கள் கூட்டமைப்பு அனுமதிக்காது.
மேலும் 'கத்தி' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம். எங்கள் கூட்டமைப்பில் 150-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் உள்ளன. சில கட்சிகளும் எங்கள் அமைப்பில் உள்ளன. 'கத்தி' படம் வெளிவருவதை எதிர்க்கும் வகையில், எங்கள் அமைப்பு சார்பில் மாபெரும் போராட்டம், சென்னையில் நடத்தப்படும். இதுதொடர்பாக எங்கள் அமைப்பில் உள்ள இயக்கங்களின் தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றார். இதனிடையே தமிழர் அமைப்புக்களின் பகிரங்க எதிர்ப்பு காரணமாக கத்தி ஆடியோ விழாவிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர். வெளி ஆட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நான் ஈ சுதீப் கலந்து கொள்ள உள்ளார்.