தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வேடப்பன், வெளுத்துக்கட்டு உள்பட சில படங்களில் நடித்தவர் அருந்ததி. பெங்களூரைச் சேர்ந்தவரான இவருக்கும் விஜய், அஜீத், சூர்யா என்ற பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற கனவெல்லாம் இருந்தது. ஆனால், எதுவும் கைகூடவில்லை. இருப்பினும் கிடைத்த படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக, விமல்-பிரசன்னா நடித்த நேற்று இன்று என்ற படத்தில் ஒரு விலைமாது ரோலில் படம் முழுக்க ஒரு டீசர்ட்டை அணிந்து நடித்திருந்தார். அதையடுத்து, அருந்ததி நடிப்பில் தொட்டால் தொடரும், சரவணப் பொய்கை, நாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.
ஆனால், இதன்பிறகு நடிப்பதற்கு இன்னமும் எந்த கம்பெனியும் அருந்ததியை அணுகவில்லையாம். அதனால் சில மாதங்களாக வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் அருந்ததி, இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு மாதத்தில் சென்னையை காலி செய்து விட்டு தனது சொந்த ஊரான பெங்களூருக்கு சென்று விட முடிவெடுத்துள்ளாராம். ஒருவேளை அதற்குள் தொட்டால் தொடரும், நாய்கள் ஜாக்கிரதை படங்கள் வெளியாகி ஹிட்டாக அமைந்து விட்டால், பெங்களூருக்கு திரும்பிச்செல்லும் தனது முடிவை மறுபரிசீலனை செய்வாராம் அருந்ததி.