பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
ஷங்கரின் ஐ படத்தில் மலையாள நடிகர் சுரேஷ்கோபியும் சிவாஜியின் மூத்தமகன் ராம்குமாரும் வில்லன்களாக நடிக்கின்றனர். செப்டம்பர் 15ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐ படத்தின் ஆடியோ விழாவுக்கு இவர்கள் இருவருக்குமே அழைப்பு இல்லை. அது மட்டுமல்ல, விழாவில் திரையிடப்பட்ட ஐ முன்னோட்டத்தில் சுரேஷ்கோபி, ராம்குமார் சம்மந்தப்பட்ட ஒரு ஷாட் கூட இல்லை. புகழ்பெற்ற மலையாள நடிகரும், தேசிய விருதை வென்றவருமான சுரேஷ் கோபி, அஜித் நடித்த தீனா உட்பட ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்.
நீண்டநாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை அழைத்தவர்கள் ஐ படத்தில் நடித்த சுரேஷ்கோபியை ஏன் அழைக்கவில்லை? ஐ படத்துக்காக சுரேஷ்கோபி கொடுத்த கால்ஷீட்டை இயக்குநர் ஷங்கர் சரியான முறையில் பயன்படுத்தவில்லையாம். அதனால் மீண்டும் மீண்டும் அவர்கள் கால்ஷீட் கேட்டபோது சுரேஷ்கோபி டேட் கொடுக்கவில்லை. இது தொடர்பான பிரச்சனையில் சுரேஷ்கோபிக்கும் ஷங்கருக்கும் மன வருத்தம் ஏற்பட்டது. அதனால் அழைக்கவில்லையாம்.
உண்மை இப்படி இருக்க, சுரேஷ்கோபிக்கு செப்டம்பர் 15ஆம் தேதி தவிர்க்க முடியாத படப்பிடிப்பு வேலைகள் இருந்ததால்தான் அவரால் அந்த விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை என்றும், அவரின் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருப்பதால்தான் ஐ டீஸரில் அவரைக் காட்டாமல் ஷங்கர் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் என்றும் சுரேஷ்கோபி தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.