தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சர்வதேச அளவில் புகழ் பெற்ற திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுப் போட்டியில் கலந்து கொள்ள இந்தியப் படங்களைத் தேர்வு செய்யும் பணியை இந்தியத் திரைப்பட சம்மேளனம் ஆரம்பித்துள்ளது. அந்தந்த மாநில மொழிகளிலுள்ள தயாரிப்பு சங்கங்கள் அவர்கள் மொழிப் படங்களை இந்தியத் திரைப்பட சம்மேளனத்திற்கு பரிந்துரை செய்வதன் அடிப்படையில் கடைசியாக இந்திய அளவில் தேர்வு செய்து ஆஸ்கர் போட்டிக்கு அனுப்புவார்கள். அந்த விதத்தில் தெலுங்குத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், 'மனம் மற்றும் மினுகுருலு' படங்களை பரிந்துரைத்துள்ளது.
'மனம்' படத்தை விக்ரம் குமார் இயக்க ஏ.நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ளனர். 'மினுகுருலு' படத்தை அயோத்யா குமார் இயக்க ஆசிஷ் வித்யார்த்தி, சுஹாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் குழந்தைகளுக்கான சிறந்த திரைப்பட விருதைப் பெற்ற படமாகும்.
ஏற்கெனவே ஒரு சர்வதேச விருதைப் பெற்றுள்ளதால் 'மினுகுருலு' படம் 'மனம்' படத்தை விட ஆஸ்கருக்கான தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ள சிறந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த கதையம்சமும், நடிப்பும் கொண்ட 'மினுகுருலு' படத்திற்கு அதற்கான தகுதியும் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் பல சர்வதேசப் போட்டிகளிலும் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால், 'மினுகுருலு' ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டால் விருது நிச்சயம் என்கிறார்கள் தெலுங்குத் திரையுலகினர்.