டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாண்டிய நாடு படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் படம் ஜீவா. வெண்ணிலா கபடி குழுவில் கபடி விளையாட்டை எடுத்தவர். இதில் கிரிக்கெட்டை எடுக்கிறார். நிஜத்திலும் கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால், இதில் கிரிக்கெட் வீரராகவே நடிக்கிறார். ஸ்ரீதிவ்யா ஹீரோயின். இமான் இசை. மதி ஒளிப்பதிவு.
படத்தின் கதையை பற்றி சுசீந்திரன் கூறியிருப்பதாவது: கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவின் உயிராக மாறிவிட்டது. இங்குள்ள எல்லோருக்குள்ளும் ஒரு கிரிக்கெட் வீரனோ, ரசிகனோ இருக்கிறான். துடிப்பான இளைஞர்கள் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கிறார்கள். செலக்ஷன் அரசியலில் அடிப்பட்டு கிரிகெட்டையே மறந்துடுறாங்க. கிரிக்கெட்டில் ஜெயிச்சவங்க, தோத்தவங்க ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒரு வலியிருக்கு. அப்படியருத்தனோட வலிதான் படம்.
50 வயசுல சினிமா டைரக்டராயிடலாம், பணக்காரனாயிடலாம், விஞ்ஞானி ஆகலாம். ஆனால் 22 வயசுக்குள்ள கிரிக்கெட் வீரனாக வேண்டும். தவறவிட்டால் அப்புறம் எப்பவுமே ஆகமுடியாது. அப்படி 20 வருட உழைப்பு, கனவு இரண்டையும் தொலைச்சவன் இன்னொரு வாழ்க்கையை தேடி எங்கே போவான் அதை பேசுகிற படம்.
எல்லா நாட்டுலேயும் கிரிக்கெட் விளையாடித்தான் தோத்துபோவாங்க. நம்ம நாட்டுல மட்டும்தான் வாய்ப்பு கிடைக்காமலே தோத்து போறாங்க. அதைத்தான் படம் பேசப்போகுது. என்கிறர் சுசீந்திரன்.