இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக அறிமுகமான விஜய், அதை அடுத்த நடித்த தேவா படத்திலேயே கதாநாயகியை வர்ணித்து பின்னணி பாடத் தொடங்கி விட்டார். அந்த படத்தில், அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு என்று அப்பட நாயகியான ஸ்வாதியின் அழகை வர்ணித்து விஜய் பாடிய அப்பாடல் அந்த படம் வெளிவந்த நேரத்தில் ஹிட்டானது.
அதேபோல் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள கத்தி படத்திலும் பட நாயகி சமந்தாவை வர்ணித்து ஒரு பாடல் பாடியுள்ளார், விஜய். ஏற்கனவே 5 பாடல்களை பதிவு செய்து கொடுத்து விட்ட இசையமைப்பாளர் அனிருத், விஜய் பாட வேணடிய நாளுக்காக காத்துக்கொண்டிருந்தார். அதனால் சில நாட்களுக்கு முன்பே அவரிடம் டியூனை கொடுத்து பயிற்சி எடுக்க சொன்னவர். நேற்று அந்த பாடலையும் விஜய் பாட பதிவு செய்து விட்டார்.
செல்ப்பி புள்ள என்று தொடங்கும் பெப்பியான அந்த பாடலை ஒரே மணி நேரத்தில் பாடிக்கொடுத்தாராம் விஜய. கதைப்படி செல்ப்பி பிரியரான சமந்தாவை புகழும் வகையில் இந்த பாடல் இடம்பெற்றிருக்கிறதாம். விஜய் பாடியுள்ள இந்த பாடலை மெகா ஹிட் பண்ணிவிட வேண்டும் என்று பாடலில் புதுமையான இசைக்கருவிகளை இணைத்து கலர்புல்லாக உருவாக்கியிருக்கிறாராம் அனிருத்.