ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. அவரது படங்கள் அங்கு தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்து கொண்டிருந்தது. தமிழிலும் ஒரு இடத்தைத் தக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் சமந்தா. அதனால், சூர்யாவுடன் 'அஞ்சான்', விஜய்யுடன் 'கத்தி', விக்ரமுடன் 'பத்து எண்ணுறதுக்குள்ளே' ஆகிய படங்களில் நாயகியாக ஒப்பந்தமானார். இவற்றில் 'அஞ்சான்' படம் வெளிவந்து அடுத்த வாரத்திற்குள்ளேயே வசூல் அடங்கி விட்டது. முதல் நாள் வசூல் இவ்வளவு, இரண்டாம் நாள் வசூல் அவ்வளவு என அவர்கள் பொய்க் கணக்கை அள்ளிவிட்டாலும் உலகம் முழுவதும் 'அஞ்சான்' படம் தோல்வியடைந்தது.
'அஞ்சான்' படத்தில் நடித்த ராசியோ என்னவோ தெலுங்கில் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்த சமந்தா நடித்து சமீபத்தில் வெளியான 'ரபாசா' படம் தோல்வியடைந்து விட்டது. தெலுங்கின் முன்னணி நடிகரான ஜுனியர் என்டிஆர் நாயகனாக நடித்திருந்தும் அந்தப் படம் தோல்வி அடைந்தது தெலுங்குத் திரையுலகை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் சமந்தா படத்தில் கிளாமராகவே நடித்திருந்தாராம்.
இதே சமந்தாவின் கிளாமர்தான் அவர் இதற்கு முன் புதுமுகம் சாய் சீனிவாசுடன் நடித்த 'அல்லுடு சீனு' படத்தைக் காப்பாற்றியது. ஆனால், 'ரபாசா' படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. அது மட்டுமல்ல 'ரபாசா' படத்தை பிரமோஷன் செய்வதற்கும் சமந்தா வரவேயில்லையாம். தமிழைப் போலவே தற்போது தெலுங்கிலும் பட பிரமோஷன்களுக்கு வருவதில்லை என அங்கு புதிய பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது. அதனால், அங்கு சில நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.