ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு நடிகர் சீனிவாசன் எந்த சினிமா விழாக்களுக்கு வந்தாலும் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. அதேபோல் அவர் செல்லும் பள்ளி, கல்லூரி விழாக்களிலும் அவரை பார்த்தாலே ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள் அந்த அளவுக்கு அந்த ஒரே படம் அவரை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.
அதனால்தான் அந்த படத்திற்கு பிறகு அவரை கூட்டணி சேர்த்தால், தனது மார்க்கெட்டை காலி பண்ணி விடுவார் என்று சந்தானமே ஒரே படத்தோடு அவரை கழட்டி விட்டார். ஆனபோதும் தான் ஷோலோவாக மார்க்கெட்டை பிடிக்க பவர் முட்டிமோதிக்கொண்டிருந்த நேரம் பண மோசடி வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு சென்றதால் அவரது மார்க்கெட் ஆட்டம் கண்டது.
இருப்பினும் தற்போது ஐ, சுட்டம் பழம் சுடாத பழம், நாலு பொண்ணு நாலு பசங்க என சில படங்கள் மூலம் மீண்டும் எழுந்து வந்து கொண்டிருக்கிறார் சீனிவாசன். மேலும் வழக்கம் போலவே தான் எங்கு சென்றாலும் ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு கூட்டத்தையே திரட்டிக்கொண்டு திரியும் அவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், திருமணமான நிகழ்ச்சி தொகுப்பாளினி கல்யாணி கேட்ட கேள்விகளுக்கு எக்குதப்பாக பதில் கொடுத்தார். அதாவது அவரிடம் முத்தம் கேட்டதோடு நில்லாமல், நாம ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று பதில கொடுத்து தொகுப்பாளினியை நடுநடுங்க வைத்தார்.
அதோடு, என்னோட ரசிகர்கள் உருவாக்கப்பட்டவர்களாக சொல்கிறார்கள் அது உண்மையில்லை. எனது ரசிகர்கள் தானாக உருவானவர்கள். எனக்கு ஒன்னுன்னா தீக்குளிக்கக்கூட தயங்கமாட்டார்கள். அந்த அளவுக்கு எனது ரசிகர்கள் வெறித்தனமானவர்கள் என்றும் சொல்லி, டிவி நேயர்கள் வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்தார் சீனிவாசன்.