தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமா உலகைப்பொறுத்தவரை நடிகரின் மகனோ, டைரக்டரின் மகனோ யாராக இருந்தாலும் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் அவர்களின் கனவாக இருக்கும். அதற்கு தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என்று பலரை உதாரணமாக சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில, மலையாள சினிமாவில் உள்ள மம்மூட்டி தனது மகன் துல்கர் சல்மானை ஹீரோவாக்கி விட்டதை அடுத்து, இப்போது ஜெயராமும் தனது மகன் காளிதாஸை ஹீரோவாக அறிமுகம் செய்திருக்கிறார்.
இந்த நிலையில், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லால் அவரது மகன் ப்ரணவை இன்னமும் சினிமாவில அறிமுகம் செய்யவில்லை. ஏற்கனவே இதுபற்றி அங்குள்ள மீடியாக்கள், உங்கள் மகனை எப்போது ஹீரோவாக அறிமுகம் செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டபோது, அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று கூறினார்.
ஆனால், இப்போது மகன் ப்ரணவை ஹீரோவாக அறிமுகம் செய்யாமல், உதவி இயக்குனராக பணியாற்ற வைத்திருக்கிறார் மோகன்லால். கமல் நடித்து வரும் த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தை இயக்கும் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம்தான் உதவியாளராக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார் ப்ரணவ்.
ஆக, ஹீரோவின மகன் ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படாமல், டைரக்டராக வேண்டும் என்ற தனது ஆசையை தந்தையிடம் ப்ரணவ் சொல்லியதை அடுத்து, இப்போது அவர் உதவி இயக்குனராகியிருக்கிறாராம்.