இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஜெயராம். மலையாள நடிகரான இவர், தற்போது தனது மகன் காளிதாஸை தமிழில் அறிமுகம் செய்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன், அடுத்து ''ஒரு பக்க கதை'' என்ற படத்தை இயக்குகிறார். இதில் காளிதாஸ் தான் ஹீரோவாக நடிக்கிறார். காளிதாஸ், ஏற்கனவே மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக, 'கொச்சு கொச்சு சந்தோஷங்கள்', 'என்டே வீடு அபுந்தேட்டன்' போன்ற படங்களில் நடித்துள்ளார். சென்னையில் விஸ்காம் முடித்த காளிதாஸ், மிமிக்ரியில் வல்லவர். கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மிமிக்ரியில் அசத்தியுள்ளார். அப்படி அவர் டிவியில் செய்த மிமிக்ரி நிகழ்ச்சியை பார்த்து இந்தப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் பாலாஜி தரணிதரன்.
இந்நிலையில், காளிதாஸை அறிமுகம் செய்து வைக்கு நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது. நடிகர் கமல்ஹாசன், காளிதாஸை அறிமுகம் செய்து வைத்தார். கூடவே அவருக்கு சில அறிவுரைகளையும் வழங்கியதோடு, சினிமாவில் அவர் பெரிய ஆளாக வர வேண்டும் என்று வாழ்த்தினார்.
கமல் பேசுகையில், இந்த விழாவுக்கு நான் வர முக்கிய காரணம் நட்பு தான். என்னை தூற்றுபவராக இருந்தால் கூட அவர்களை மதிப்பேன். சம்மந்தி சண்டை ஒருபக்கம் இருந்தாலும் சினிமா என் குடும்பம். அதில் ஜெயராம் ஒருவர். ஜெயராம் ரொம்ப பெரிய ஆள் தான். தனது மகனுக்கு பெயரை கூட ரொம்ப யோசித்து காளிதாஸ் என்று வைத்துள்ளார். சினிமாவில் கணேசன் என்ற பெயரில் நிறையபேர் வந்தார்கள். எழுத்தாளர் சுஜாதா கூட தனது பெயரான ரெங்கராஜனை விடுத்து தனது மனைவி பெயரில் கதை எழுத தொடங்கினார். சினிமாவில் தன் மகனுக்கு பெயர் பிரச்னை வந்துவிடக்கூடாது என்று எண்ணி இப்படி ஒரு பெயர் வைத்துள்ளார்.
எனக்கு விவரம் தெரிந்தது முதல் சினிமாவில் நடிக்கிறேன். சினிமாவில் சாதிக்க அவர்களது டி.என்.ஏ., ரத்தம் போன்றவைகள் காரணம் கிடையாது. சினிமாவில் ஜெயிக்க உழைப்பு தான் முக்கியம். 30 வருடமாக படம் எடுக்கிறேன். இதில் சில படங்கள் வித்தியாசமாக அமைந்தது. இதற்கு மூலகாரணமே பாலசந்தர் சார் தான். அவர் வீட்டில் வளர்ந்த பிள்ளை வித்தியாசமாகத்தான் இருப்பார்கள். ரசிகர்கள் இப்போது வித்தியாசத்தை விரும்புகிறார்கள், கதை வித்தியாசமாக இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.
காளிதாஸை நான் சும்மா வந்து அறிமுகப்படுத்தியுள்ளேன். இனி தயாரிப்பாளர், இயக்குநர்கள் தான் அவரை அறிமுகம் செய்து அவருக்கு வழிகாட்ட வேண்டும். சினிமாவில் வரும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மனிதர்களையும், புத்தங்களையும் நன்றாக படி. சினிமாவில் ஏதேனும் பாலிடிக்ஸ் என்றால் உன் அப்பாவிடம் கேட்காதே, என்னிடம் கேள். எனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிறையபேர் அரசியல் செய்கிறார்கள். அப்பா பெயரை காப்பாற்று, நல்ல படங்களை தேர்தேடுத்து வளர்த்துக் கொள். சினிமாவுக்கு வந்துவிட்டால் ஏசி கேரவன் கிடைக்கும் என்று எண்ணிவிடாதே, கடுமையாக உழைத்தால் தான் சினிமாவில் ஜெயிக்க முடியும். பணிவு, உழைப்பும் வர வேண்டும். சினிமாவில் உள்ள கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.