பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
தமிழ், தெலுங்கை அடுத்து கன்னட சினிமாவிலும் அழுத்தமாகக் கால் பதித்து விட்டார் த்ரிஷா. சினிமாவில் அறிமுகமாகி பத்து ஆண்டுகளுக்கு மேலானாலும் த்ரிஷா நடித்த முதல் கன்னடப் படமான 'பவர்' சில தினங்களுக்கு முன் கர்நாடகாவில் வெளியானது. வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே சுமார் 3 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து படம் சாதனை புரிந்துள்ளதாம். தமிழ், தெலுங்கு ரசிகர்களை தனது அழகான உருவத்தாலும், நடனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த த்ரிஷா, கன்னட ரசிகர்களையும் கவர்ந்துவிட்டாராம். புனித் ராஜ்குமாருடன் பொருத்தமான ஜோடியாக இருக்கிறார் என கன்னட ரசிகர்கள் கொண்டாடுகிறார்களாம். கன்னடத் திரையுலகில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட நடிகர் புனித் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 275 திரையரங்குகளில் வெளியான 'பவர்' திரைப்படம் வெளியான முதல் நாளில் சுமார் 1.5 கோடியும், இரண்டாவது நாளில் 1.7 கோடி ரூபாயும் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளதாக சாண்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் இந்த வார முடிவில் மட்டும் சுமார் 6 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூல் செய்துவிடும் என்றும் சொல்கிறார்கள். இது கன்னடத் திரையுலகைப் பொறுத்தவரை மிகப் பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. தான் கன்னடத்தில் அறிமுகமான படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது பற்றி த்ரிஷா மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக அவருடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.