'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
நேற்று (ஆகஸ்ட் 29) விநாயகர் சதுர்த்தி திருவிழா நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் கனிபாக்கத்தில் உள்ள பிரபல சித்தி விநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு பட நடிகர் சரண்ராஜ் வி.ஐ.பி தரிசன கேட் வழியாக சாமிகும்பிடச் சென்றார். அவர் மாலை அணிந்து காவிநிற வேட்டி சட்டை அணிந்திருந்தார். நடிகரை கண்டதும் உள்ளூர் தொலைக்காட்சி நிருபர்கள் அவரை படம் எடுத்து அதை உள்ளூர் சேனல்களில் ஒளிபரப்பினர். அப்போது சரண்ராஜ் இடுப்பில் துப்பாக்கி வைத்திருப்பது தெரிந்தது. கோவிலுக்குள் ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்கிற விதிமுறையை சரண்ராஜ் மீறிவிட்டதாக உள்ளூர் மக்கள் புகார் கூறினார்கள்.
இதை கேள்விப்பட்ட சரண்ராஜ் கோவில் முன் கூடியிருந்த நிருபர்களிடம் "சென்னையிலிருந்து காரில் வந்து சாமி தரிசனம் செய்தேன். நான் எனது பாதுகாப்பிற்காக எப்போதும் துப்பாக்கி வைத்திருப்பது வழக்கம். சாமி கும்பிட செல்லும்போது துப்பாக்கியை காரில் வைத்துவிட்டு சென்றிருக்க வேண்டும் அவசரத்தில் மறந்து உடன் எடுத்துச் சென்று விட்டேன். இதற்காக என்னை மன்னிக்க வேண்டும்" என்று கூறினார்.
இதுகுறித்து கனிபாக்கம் போலீசார் கூறியதாவது: நடிகர் சரண்ராஜ் கோவிலுக்குள் துப்பாக்கி கொண்டு சென்றது தவறுதான். இதற்காக அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். உரிமம் பெற்ற துப்பாக்கி என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திருக்கிறார். விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வருவதாக கூறியிருக்கிறார். அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்ய வில்லை. என்றார்கள்.