தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொதுவாக இன்றைய இளம் இயக்குனர்கள் ஒரு சினிமாவில் ஜெயித்த பிறகுதான் திருமணம் செய்வது என்று லட்சியம் வைத்திருப்பார்கள். சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கடைசியாக அப்படி திருமணம் செய்தார். அந்த வரிசையில் வருகிறார் சாட்டை அன்பழகன். பிரபுசாலமன் தயாரித்த சாட்டை படத்தை இயக்கியவர். பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் நல்ல படமாக அது இருந்தது. நல்ல வரவேற்பையும் பெற்றது.
அன்பழகனுக்கும் அவரது உறவுக்கார பெண் எம்.மாலாவுக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். மாலா எம்.எஸ்.சி பி.எட் படித்துள்ளார். இவர்கள் திருமணம் நாளை (ஆகஸ்ட் 31) காலை அரியலூர் மாவட்டம் செந்துறை கிராமத்தில் நடக்கிறது. திருமணத்தில் ஏராளமான நண்பர்களும், உறவினர்களும், திரையுலக பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.