பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் பாலிவுட் நடிகை ஆலியா பட் தமிழுக்கு நடிக்க வர உள்ளதாக கோலிவுட்டில் தகவல்கள் கசிந்து வருகின்றன.
மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை ஹீரோவாக வைத்து மணிரத்னம் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக, பாலிவுட்டில் 2 ஸ்டேட்ஸ் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ஆலியா பட்டை ஒப்பந்தம் செய்ய மணிரத்னம் தரப்பு முயற்சித்து வருகிறதாம்.
இந்த தகவல் பற்றி ஆலியா பட்டின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, தங்களுக்கு தெரிந்த வரையில் அப்படி எதுவும் இல்லை என்கின்றனர். மணிரத்னம் தரப்பில் இருந்தும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை எனவும் அவர்கள் மறுத்துள்ளனர்.
அலைபாயுதே போன்று இந்த படத்தை ரொமான்ட்டிக் படமாக எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். இந்த படத்திற்கு நடிகர், நடிகைகள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் மணிரத்னம் தரப்பு இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.