இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகர் ரஜினி திரையுலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதை, லிங்கா படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். 1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் மூலம் நடிகராக அறிமுகமான ரஜினி, உலக அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தின் இறுதிக்கட்ட பிடிப்பு ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில், லிங்கா படக்குழுவினர் பிரத்யேகமாக ஆர்டர் செய்த கேக்கை ரஜினி வெட்டினார். அனைவருக்கும் கேக் வழங்கிய ரஜினியுடன், படக்குழுவினர் போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர்.
அப்போது, லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கூறுகையில், ஒரு மிகப் பெரிய பாசை போன்று 40 வருடங்களாக மக்களை மகிழ்வித்துள்ளார். இந்த கொண்டாட்டத்தில் நானும் பங்கேற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினி சாருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.
ரஜினி திரையுலகிற்கு வந்த 40 வது ஆண்டை அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டு தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.