ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'அஞ்சான்' படத்தில் மற்றவர்களைப் பற்றிய பேச்சு அதிகமாக எழாமல், சமந்தாவைப் பற்றி மட்டுமே அதிகமான பேச்சு எழுந்து வருகிறது. அதற்கு ஒரே காரணம், சமந்தாவின் நீச்சல் உடைதான். தமிழில் சமந்தாவைப் பற்றி தற்போதுதான் அதிகம் தெரிய ஆரம்பித்துள்ளது என்றாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பர் சமந்தா. அவர் இப்படி நீச்சல் உடையில் நடித்தது தெலுங்கு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், தெலுங்குத் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஆச்சரியமாகவே உள்ளதாம். அட...இவ்வளவு ஓபனாக அவர் நடிப்பாரா என சமந்தாவிற்கு வாய்ப்புகளை அள்ளி வழங்க தயாராக உள்ளாராம்.
ஆனால், இந்த நீச்சல் உடை விவகாரத்தால் மகேஷ் பாபுவின் ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து கமெண்ட்டுகளை அள்ளி வருகிறார் சமந்தா. முன்னர் மகேஷ் பாபுவின் படத்தின் போஸ்டரைப் பார்த்து சமந்தா கமெண்ட் அடித்ததன் விளைவுதான், இந்த பதில் கமெண்ட்டுகள். மகேஷ் பாபுவும், சமந்தாவும் விருது வழங்கும் விழா ஒன்றில் ராசியாகி விட்டாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லையாம். ஆக, தமிழ்நாட்டில் 'அஞ்சான்' படத்தைப் பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டபடி கமெண்ட் அடித்துத் தள்ளிக் கொண்டிருக்க, ஆந்திராவிலோ சமந்தாவை கமெண்ட்டுகளால் கண்ணீர் விட வைத்து வருகிறார்களாம். மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அடிக்கும் கமெண்ட்டுகளை, மகேஷ் பாபுவே நிறுத்தச் சொன்னால்தான் உண்டு என்கிறார்கள். ரசிகர்களைக் கட்டுப்படுத்தி, சமந்தாவை சமாதானப்படுத்துவாரா மகேஷ் பாபு என்பதே தற்போது அங்குள்ள கேள்வியாக இருக்கிறதாம்.
சமீப காலத்தில் 'அஞ்சான்' படத்திற்குத்தான் இந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் வரிந்து கட்டிக் கொண்டு கமெண்ட் அடித்திருக்கிறார்களாம்.