டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பார்த்திபன் இயக்கிய, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் கடந்த 15ந் தேதி வெளியானது. மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படம் பார்த்திபனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. மேலும் 60 திரையரங்குகளும் உயர்த்தப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்கு பிறகு பெற்ற வெற்றியை நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று கேக் வெட்டி கொண்டாடினார். சென்னை பிரசாத் லேப்பில் இந்த சக்சஸ் பார்ட்டி நடந்தது. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் இயக்குநர் பார்த்திபன் உடன் தம்பி ராமைய்யா, இசையமைப்பாளர் சத்யா, மனீஷ்ய புத்திரன் மற்றும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த நடிகர்-நடிகையரும் பங்கேற்றனர்.
மேலும் திருட்டு விசிடி.க்கள் அதிகமாகிவிட்டதாகவும், சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் திருட்டு விசிடி வெளியான போது, நான் போலீசிடம் புகார் தெரிவித்தேன். ஆனாலும் பெரிய நடவடிக்கை இல்லை. இப்போது என் படத்தின் திருட்டு விசிடிக்களும் வெளிவந்துள்ளது. என்னிடமே இரண்டு சிடிக்கள் உள்ளன, திருட்டு விசிடியை தடுக்கும் பொருட்டு நாளை போலீஸ் உதவியுடன் சென்னையில், நானே நேரடியாக ரெய்டில் இறங்கபோகிறேன் என்று கூறியுள்ளார் பார்த்திபன்.