ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் கலெக்டராக நடித்தவர் அரவிந்த்சாமி. அதையடுத்து ரோஜா, பம்பாய், என் சுவாசக்காற்றே, இந்திரா, மின்சாரகனவு என பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனக்கேற்ற கதைகள் அமையவில்லை என்றதும், நடிப்பை விட்டு விலகியிருந்தார் அரவிந்த்சாமி.
ஆனால் அப்படியிருந்தவரை 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே மணிரத்னம் தனது கடல் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் பாதிரியாராக நடித்த அரவிந்த்சாமிக்கு உடனடியாக தமிழில் படங்கள் கிடைக்கவில்லை. அதனால் மலையாளத்தில் ப்ருதிவிராஜூடன் ஒரு படத்தில் நடித்தவர், இப்போது இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். அப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இதற்கிடையே கெளதம்மேன்ன இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அரவிந்த்சாமிதான் வில்லனாக நடிப்பதாக இருந்தது. ஆனால், போட்டோசெஷனுக்குப்பிறகு தான் எதிர்பார்த்த வில்லனாக அரவிந்த்சாமியின் தோற்றம் இல்லை என்று அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து விட்டார் கெளதம்மேனன்.
இந்த நிலையில், தற்போது ஜெயம்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி-நயன்தாரா நடித்து வரும் தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி வில்லன் வேடத்தில் நடிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளனர். இதையடுத்து வில்லனாக இந்திய அளவில் ஒரு மெகா ரவுண்டு வரவும் திட்டமிட்டுள்ளாராம் அரவிந்த்சாமி.