'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எல்லோருக்கும் ஒரு பாதை என்றால் எனக்கு மட்டும் ஒரு தனி பாதை என்பார் டைரக்டர் பாலா. அவரது கதை மட்டுமின்றி நடிகர்-நடிகை செலக்சனும் அப்படித்தான் இருக்கும். அந்த வகையில் தனது, சேது படத்தில் இருந்து அவன் அவன், பரதேசி படங்கள் வரை வித்தியாசமான வில்லன்களை நடிக்க வைத்த பாலா, இப்போது சசிகுமார்-வரலட்சுமியை வைத்து இயக்கி வரும் தாரை தப்பட்டை படத்திற்க்காகவும் கடந்த சில மாதங்களாக தீவிரமாக வில்லன் நடிகரை தேடி வந்தார்.
ஆனால், சினிமாக்களில் நடித்து வரும் வில்லனாக அவர் தேடவில்லை. இதுவரை நடிக்காத வித்தியாசமான வில்லனாக தேடி வந்தார். அப்படி அவர் தேடிவந்தபோது அவரது கண்ணில் பட்டவர்தான் ஸ்டுடியோ 9 சுரேஷ். தனது வில்லன் கதாபாத்திரததிற்கு நன்றாக பொருந்துவார் என்று நினைத்த பாலா, அவரை அழைத்து பேசியிருக்கிறார்.
நடிக்க வேண்டும் என்றதும் முதலில் அவர் தயங்கினாராம். அதன்பிறகு பாலா கதையை விளக்கியபோது, நீங்கள் சொல்லித்தருவதை அப்படியே செய்கிறேன். மற்றபடி எனக்கு நடிப்பைப்பற்றி எதுவும் தெரியாது எனறு சொன்னாராம். அதற்கு, எனக்கும் அந்த மாதிரி வில்லன்தான் தேவை என்று சொல்லி அவர் புக் பண்ணி விட்டாராம்.
அதோடு, இந்த தாரை தப்பட்டை வெளிவந்தால், தமிழ் சினிமாவின அடுத்த மெகா வில்லன் நீங்கள்தான். இந்த கதை அந்த அளவுக்கு உங்களை பிமாண்டமாக்கி காட்டும் என்றும் நம்பிக்கை கொடுத்துள்ளாராம் பாலா.