டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மைந்தன் படத்தை அடுத்து தற்போது 8 எம்எம் என்ற படத்தையும் மலேசிய தமிழர்கள் தயாரித்து உள்ளனர். மைண்ட் ஸ்கிரீன் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் ஜெய ராதா கிருஷ்ணன் தயாரித்துள்ள இப்படத்தை அமின் என்ற மலேசிய தமிழர் இயக்கியுள்ளார். நிர்மல்-திவ்யா என்ற புதுமுகங்களுடன் சிவபாலன், காந்திதாசன் ஆகிய மலேசிய நடிகர்களும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
மேலும், சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு எல்.வி.கணேசன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில், அப்படத்தின் முக்கிய டெக்னீசியன்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இப்படம் பற்றி இயக்குனர் அமின் பேசும்போது, 8 எம்எம் என்றொரு விசயத்தை முக்கிய கருவாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்சன், த்ரில்லர் படமாக இருந்தபோதும், குத்து, கானா, செண்டிமென்ட் என அனைத்து வகை பாடல்களும் படத்தில் உள்ளன. அந்த அளவுக்கு இந்த ஆக்சன் கதையில் செண்டிமென்ட் டச்சும் உள்ளது.
மேலும் இந்த படத்தில் இசை மட்டுமின்றி, ஒளிப்பதிவாளர் சக்திவேல் பெரிய அளவில் சாதனை புரிந்துள்ளார். இந்த படத்துக்காக அவர் 6 வகையான கேமராக்களை பயன்படுத்தி படமாக்கினார். அதோடு, இதுவரை எந்த கேமரா கண்களும் படாத மலேசியாவிலுள்ள கடாரம் பகுதியில் முதன்முறையாக சக்திவேலின் கேமரா கண்கள்தான் படம் பிடித்திருக்கிறது.
முக்கியமாக, தமிழ்நாட்டை ஆண்ட ராஜராஜ, ராஜேந்திரன சோழர்கள் மலேசியாவின் கடாரம் பகுதிக்கு கப்பலில் சென்று வியாபாரம் செய்தார். அதனால்தான் அவர்களை கடாரம் கண்டான் என்பார்கள். அத்தகைய சரித்திர சிறப்பு வாய்ந்த அந்த இடத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம்.
அதோடு, இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு காட்டுப்பகுதிகளில் நடைபெற்றதால், நாயகன் நிர்மல், நாயகி திவ்யா இருவருமே பலமுறை கீழே விழுந்து ரத்தம் சொட்ட சொட்ட நடித்தனர் என்று சொல்லும் டைரக்டர் அமின், இப்படம் இதுவரை தமிழில் வெளியான ஆக்சன் த்ரில்லர் படங்களில் இருந்து கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும் என்கிறார்.