நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
உலகம் முழுவதும் எண்ணற்ற இசை ரசிகர்களைக் கொண்டவர் இளையராஜா. பல்வேறு மொழிகளில் இசையமைத்து, ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த இளையராஜா, இப்போது அவரது ரசிகர் மன்றங்களை 'இளையராஜா ஃபேன்ஸ் கிளப்' என்ற ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளார். சமீபத்தில் அவரது ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த சிலரை அழைத்துச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊராண பண்ணைபுரத்தில் உலகத் தரம் வாய்ந்த ஒரு பள்ளியை ஆரம்பிப்பதே தனது லட்சியம் என்றார். அதை நிறைவேற்றி முடித்த பின்னர் மேலும் பல சமூக சேவை விஷயங்களில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவருடைய மனைவி ஜீவாவின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள டிரஸ்ட் மூலம் பண்ணைபுரத்தில் பள்ளியைக் கட்ட ஆரம்பித்துள்ளார். சமூக சேவையில் முழுமையாக ஈடுபட வசதியாக நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் ரசிகர் மன்றங்களை 'இளையராஜா ஃபேன்ஸ் கிளப்' கீழ் இணைக்கும் பணிகளும் ஆரம்பமாகியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் இனி தனக்குக் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்கு வழங்கப் போவதாகவும் இளையராஜா அறிவித்துள்ளார். ரசிகர்களும் ஒரிஜனல் சிடிக்களை வாங்க வேண்டும், சட்ட விரோதமாக கிடைக்கும் விஷயங்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
'இளையராஜா ஃபேன்ஸ் கிளப்' சமூக வலைத்தளங்களிலும் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது.