தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குணசேகரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் சரித்திரப் படமான 'ருத்ரமாதேவி' படப்பிடிப்புத் தளத்தில் இருந்து சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்க நகைகள் சில தினங்களுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டது. படத்தில் பயன்படுத்தப்படும் நகைகள் ஒரிஜனல் தங்கத்தால் செய்யப்பட்டவை. நகை கொள்ளை அடிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வேன் டிரைவர், நகைக் கடை ஊழியர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். படத்தின் நாயகியான அனுஷ்கா, மற்றொரு நாயகியான கேத்தரின் ஆகியோர் அணியும் ஆபரணங்கள்தான் கொள்ளை அடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஒவ்வொரு கட்டப் படப்பிடிப்பு முடிந்த பின் அந்த நகைகள் மீண்டும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு விடுமாம். கடந்த ஆறு கட்டப் படப்பிடிப்பு எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடந்திருக்க, ஏழாவது கட்டப் படப்பிடிப்பில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடமிருந்து நகைகள் பற்றிய தகவல்கள் கிடைத்ததா, எங்கு அவற்றைப் பதுக்கி வைத்துள்ளனர் போன்ற விவரங்களை காவல் துறை இன்னும் வெளியிடவில்லை. இந்தச் சம்பவம் தெலுங்குத் திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.