இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தேனீர் விடுதி என்ற படத்தை இயக்கிய இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், அதையடுத்து கேரள நாட்டிளம் பெண்களுடனே என்ற படத்தை தயாரித்து இயக்கி சமீபத்தில் வெளியிட்டார். அப்படத்தில் புதுமுகங்கள் அபி, காயத்ரி உள்பட பலர் நடித்திருந்தனர். ஆனால், அப்படத்தை செக்ஸ் படம் என்று கருதி சில மெகா தியேட்டர்களில் ரிலீஸ் பண்ண மறுத்து விட்டனர். இதனால் அப்படம் வெற்றி பெறவில்லை.
மேலும், இந்த படத்தை இயக்கும்போதே தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் இயக்கிய எஸ்.எஸ்.குமரன், மே மாதத்தில் அப்படத்தை கேரளா.காம் என்ற பெயரில் கேரளாவில் வெளியிடுகிறார். முழுக்க முழுக்க கேரளாவிலேயே அப்படத்தை படமாக்கியிருப்பதோடு, அதில் நடித்துள்ள நாயகி காயத்ரி மலையாள நடிகை என்பதால், தமிழில் கிடைக்காத வெற்றி மலையாளத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையில் அங்கு வெளியிடுவதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளனார்.
இதற்கிடையே, இந்த படத்திற்கான நாயகன் தேர்வு நடந்தபோது விஜயசேதுபதியும் அவரது அலுவலகத்துக்கு சென்று வாய்ப்பு கேட்டாராம். அப்போது பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் விஜயசேதுபதி நடித்துக்கொண்டிருந்தாராம். ஆனால், தன்னுடைய கதைக்கு அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று நினைத்து அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் அனுப்பி விட்டாராம் எஸ்.எஸ்.குமரன்.
ஆனால், அப்படி தன்னைத்தேடி வந்து சான்ஸ் கேட்ட விஜயசேதுபதியை அப்போது திருப்பி அனுப்பியதை நினைத்து, அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்கள் சூப்பர் ஹிட்டானபோது ரொம்பவே வருந்தினாராம் எஸ்.எஸ்.குமரன். அதோடு, இப்போது தனது படம் தோற்று விட்டதால், ஒருவேளை விஜயசேதுபதி நடித்திருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும். பெரிய வெற்றி இல்லாமல் சுமாராக ஓடியிருந்தாலும் நான் நஷ்டத்தில் இருந்து தப்பித்திருப்பேன் என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார்.