ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று(ஏப்ரல் 24ம் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 39 தொகுதிகளிலும் வாக்காளர்கள் தங்களது ஓட்டை பதிவு செய்தனர். சினிமா நட்சத்தி்ரங்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். நடிகர் ரஜினிகாந்த் இன்று காலையே சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஓட்டளித்தார்.
யாரையும் ஆதரிக்கவில்லை - ரஜினி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஓட்டளிப்பது நமது கடமை, நாம் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும், கண்டிப்பாக எல்லோரும் ஓட்டளியுங்கள் என்று சொன்னதோடு, இந்த தேர்தலில் நான் யாரையும் ஆதரிக்கவில்லை என்று கூறினார். சமீபத்தில் பா.ஜ. பிரதமர் வேட்டாளர் நரேந்திர மோடி, ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இதேப்போல் நடிகர் கமல்ஹாசன், கவுதமியுடன் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ஓட்டளித்தார். முன்னதாக யாருக்கு ஓட்டு போடுகிறேன் என்பதை படம் பிடிக்காதீர்கள் என்று கமல் கேட்டுக் கொண்டார்.
நடிகர் அஜீத், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் ஓட்டு போட்டார். நடிகர் விஜய், அடையாறில் உள்ள பள்ளியில் ஓட்டு போட்டார். இவர்கள் தவிர நடிகை குஷ்பு, அவரது கணவர் சுந்தர்.சி, ஜீவா, பாரதிராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.
காயத்துடன் ஓட்டளித்த சூர்யா...
நடிகர் சூர்யா, அவரது சகோதரர் கார்த்தி, அவரது அப்பா சிவக்குமார் ஆகியோருடன் திநகரில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டுபோட்டார். முன்னதாக அவர் ஓட்டுச்சாவடிக்கு வந்தபோது, அவரது காலில் காயத்துடன், தடியை பிடித்துபடி தாங்கி தாங்கி நடந்தார். அஞ்சான் படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்தால் அவரது காலில் அடிபட்டு இருந்தது. இருந்தும் சூர்யா சிரமம் பார்க்காமல் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.