மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பொதுவாக எல்லோரையும் பெயர் சொல்லியோ, சார் என்றோ அழைக்கும் சந்தானம், உதயநிதி ஸ்டாலினை மட்டும் முதலாளி என்றுதான் அழைப்பார். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் உதயநிதிக்கும், சந்தானத்துக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது பவர்ஃபுல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் உதயநிதியை முதலாளி என்று அழைக்க ஆரம்பித்தார் சந்தானம்.
ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களில் நடித்தபோதும் முதலாளி என்றுதான் அழைப்பார். அப்படி அழைக்க வேண்டாம் என்று உதயநிதி பல தடவை சந்தானத்திடம் சொல்லிப்பார்த்திருக்கிறார். சந்தானம் கேட்கவில்லை. உதயநிதியை அவர் இப்படி அழைக்க காரணம் வெறும் நட்பு மட்டும் இல்லையாம். அப்புறம்?
வெகுகாலமாக தீராமல் இருந்த சந்தானத்தின் சொத்து பிரச்னை ஒன்றை, உதயநிதி தான் தலையிட்டு தீர்த்து வைத்தாராம். அந்த நன்றிக்கடனும் சேர... உதயநிதியை முதலாளி என்று அழைப்பதை நிரந்தரமாக்கிக் கொண்டாராம் சந்தானம்.