'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
சமீபகாலமாக நடிகர், நடிகைகளைப்பற்றிய வதந்திகள் சொடக் போடும் நேரத்தில் சமூக வலைதளங்களில் பரவி விடுகிறது. அதனால் அவர்கள் ஏகப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் சில நடிகர்கள், டுவிட்டர் கணக்கு தொடங்கி, அதில் தங்களைப்பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வருகிறார்கள். சிலசமயங்களில் தவறான செய்திகள் வெளியானாலும் அதற்கு உடனே பதில் கொடுத்து ரசிகர்களை தெளிவுபடுத்திக் கொள்கிறார்கள்.
அந்த வகையில், தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை சிம்பு, தனுஷ், ஹன்சிகா, சிவகார்த்திகேயன், வடிவேலு, கெளதம்மேனன் உள்பட பலர் பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து நேற்று முதல் சந்தானமும் டுவிட்டர் கணக்கு தொடங்கி அதை அறிவித்துள்ளார். இப்படி திடுதிப்பென்று அவர் டுவிட்டர் கணக்கு தொடங்க காரணமே, சமீபத்தில் மனைவியை விட்டு அவர் பிரிந்து விட்டதாக வெளியான செய்திதானாம். இந்த செய்தியால் ரொம்பவே மனசுடைந்து விட்டாராம் சந்தானம். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான செய்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று யோசித்த பின்னரே அவருக்கு இந்த டுவிட்டர் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டதாம்.
இனிமேல், தன்னைப்பற்றிய செய்திகளை இந்த டுவிட்டரில் உடனுக்குடன் தெரிவிக்க திட்டமிட்டுள்ள சந்தானம், ரசிகர்கள் கேட்கும் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் பதில் கொடுக்கப்போகிறாராம்.