விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
நான் ஈ படம் இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி பாகுபாலி என்ற பிரமாண்ட சரித்திர படம் எடுத்து வருகிறார். இதில் அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழில் மகாபலி என்ற பெயரில் தயாராகிறது. இதன் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் பிரமாண்ட அரண்மணை ஷெட் போட்டு படமாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோச்சடையான் தெலுங்கு பதிப்பின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சென்ற ரஜினி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் "உங்கள் ஷூட்டிங்கை பார்க்க அனுமதிப்பீங்களா?" என்று கேட்டிருக்கிறார். நீங்க எப்ப வேணாலும் வரலாம் சார் என்ற அவர் பதில் சொல்ல. அடுத்த நாளே பாகுபாலி படப்பிடிப்பு தளத்தில் நின்றார் ரஜினி.
அங்கு போடப்பட்டிருந்த பிரமாண்ட அரண்மணை செட்டை பார்த்து அதன் செலவு விபரத்தை கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா உள்ளிட்ட கலைஞர்களை பாராட்டிவிட்டுச் சென்றார். ரஜினி அங்கிருந்த ஒரு மணி நேரமும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுபற்றி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி "சூப்பர் ஸ்டார் என்னோடு இருந்த தருணங்கள் என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்கள்" என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.
ரஜினி, அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ஒரு ஹிஸ்டாரிகல் பேண்டஸி படத்தில் நடிக்க இருப்பதும். அதில் அவருக்கு ஒரு ஜோடியாக அனுஷ்காக நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.