ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விளம்பர பட இயக்குனர் ஜெய் இயக்கும் முதல் திரைப்படம் ஆந்திரா மெஸ். ஏ.பி.ஸ்ரீதர், ராஜ்பரத், பூஜா, தேஜஸ்வினி நடிக்கிறார்கள். முகேஷஷ்.ஜி ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாந்த் பிள்ளை இசை அமைக்கிறார். "இதுமுற்றிலும் புதிய படம். தமிழ் சினிமாவை அடுத்து கட்டத்திற்கு எடுத்துக் செலக்கிற படம்" என்றெல்லாம் பெருமையாக சொல்கிறார் ஜெய்.
அவர் கூறியதாவது: இது அடுத்த தலைமுறைக்கு சினிமாவை கொண்டு செல்லும் முயற்சி. இதில் மாற்று சினிமாவிற்கான முக்கிய கூறுகள் அழகியல் சார்ந்து, புதிய பாணியில் கதை சொல்லியிருக்கிறேன். மேஜிக் ரியலிசம் எனப்படும் பாணியில் இருக்கும். சாதாரண வாழ்க்கையில் நாம் பார்த்திராத இடங்களில் கதை நடக்கும். ஆனால் கதையும், சம்பவமும் நாம் தினமும் பார்த்துக் கொண்டிருப்பவையாக இருக்கும்.
படத்தில் ஒரு இந்திப் பாடல் இடம் பெறுகிறது. ராஜ்பரத், மற்றும் தேஜஸ்வனி நடிக்கும் பாடல் நெருக்கமான காட்சிகளை கொண்டதாக இருக்கும். டான்ஸ் மாஸ்டர் விஜி கோரியோகிராபி செய்திருக்கிறார். பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருக்கிறது. இதற்காக பட யூனிட் அடுத்த வாரம் புனே புறப்பட்டு செல்கிறது" என்கிறார் இயக்குனர் ஜெய்.