புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாக நடிக்கிறார், தயாரிப்பாளராக இருக்கிறார். காமெடியாக நடிக்க ஒரு நாளைக்கு 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்திலும் காமெடி வாயிலாக மக்களுக்கு அட்வைசும் கொடுத்து வருகிறார். நாள் ஒன்றுக்கு 15 லட்சம் வரை சம்பளம் வாங்கும் சந்தானம். தன் அலுலகத்தின் மின் இணைப்பை, வீட்டு இணைப்பு என்று பொய் சொல்லி ஏமாற்றி அனுபவித்து வந்துள்ளார். இதை கண்டுபிடித்த மின்சார வாரியம் அவருக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. சத்தமே இல்லாமல் அபராதத்தை கட்டிவிட்டு படத்தில் நடிக்க போய்விட்டார் சந்தானம்.
விருகம்பாக்கம் ஸ்டேட் பேங்க காலணியில்தான் சந்தானத்தின் அலுவலகம் உள்ளது. பல வருடங்களாக அலுவலகம் செயல்பட்டு வந்தாலும் அதனை வீடு என்று கூறி சலுகை கட்டணத்தில் மின்சாரம் பெற்று வந்திருக்கிறார்கள். அதை மின்வாரியத்தின் பறக்கும் படை கண்டுபிடித்து அபராதம் விதித்திருக்கிறது. 60 ஆயிரம் ரூபாய் சந்தானத்திற்கு சிறிய தொகையாக இருக்கலாம். ஆனால் நாடறிந்த கலைஞன் நாட்டுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டாமா?- என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.