பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கவுண்டமணி-செந்திலுக்கு பிறகு சிறந்த காமெடி நடிகராக 15 ஆண்டுகளுக்கு மேலாக கொடிகட்டிப்பறந்தவர் வைகைப்புயல் வடிவேலு. கறுப்பு நாகேஷ் என்று சினிமா கலைஞர்களால் புகழப்பட்டு வந்த அவர், அரசியல் சுனாமிக்குள் சிக்கியதால் சிலகாலம் சிறகொடிந்து போனார். அந்த நேரத்தில், வடிவேலுவுக்கு, சிங்கமுத்து வாங்கிக்கொடுத்த சில அசையா சொத்துக்கள் உரிய அங்கீகாரம் இல்லாதவை என்பதால் அவர்களுக்கிடையே பெரிய போர் வெடித்தது. இதனால் இருவரும் மாறி மாறி வார்த்தை போர் நடத்தியதோடு, போலீஸ் ஸ்டேசனுக்கும் ஏறி இறங்கினார்கள்.
பின்னர் வடிவேலு எந்த படத்திலும் நடிக்காததால், அவர் கதை முடிந்து விட்டது என்றுதான் சிங்கமுத்து போன்ற அவருக்கு எதிரானவர்கள் நினைத்துக்கொண்டனர். ஆனால், இப்போது மீண்டும் கதாநாயகனாகவே வடிவேலு அடுத்த ரவுண்டை அமோகமாக ஆரம்பித்திருப்பதால் செம காண்டில் இருக்கிறார் சிங்கமுத்து.
அதனால், தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்புகளில் எந்நேரமும் வடிவேலுவைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறாராம். குறிப்பாக கேரவனுக்குள் அமர்ந்து கொண்டு, வடிவேலுவின் நடிப்பு குறித்தும், அவரது ரீ-என்ட்ரி குறித்தும் வடிவேலுவின் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாராம் சிங்கமுத்து.