மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வடிவேலு கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் படம் நாளை வெளிவரவிருக்கிறது. கடந்த வாரம் தெனாலிராமன் படத்துக்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் ஒரு பகுதியாக வடிவேலுவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முயற்சி செய்ததை அடுத்து, வடிவேலுவுக்கு ஆதரவாக சீமான் அறிக்கை வெளியிட்டார். சீமானைத் தொடர்ந்து, திரைப்பட இயக்குநர் வ.கௌதமனும், பாரதிராஜாவும் வடிவேலுவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்கள்.
இந்நிலையில் தெனாலிராமன் படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கி வரவும் வடிவேலு பயந்து போனாராம். தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக தன் படம் வெளியாகாமல் போய்விடுமோ என்ற பயம் வடிவேலுவை வாட்டி வதைக்க, காட்ரகட்ட பிரசாத் என்ற தயாரிப்பாளர் மூலமாக ரகசியமாக தெலுங்கு அமைப்புகளுக்கு தூதுவிட்டிருக்கிறார். அவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினார். அதன்படி தெலுங்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை நேற்று சந்தித்து பேசினார் வடிவேலு.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சீமான் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாராம். இன்னொரு பக்கம் பாரதிராஜாவும் வடிவேலு மீது கடுப்பாகிவிட்டாராம். தேர்தல் பிரச்சாரத்துக்காக வெளியூர்களில் முகாமிட்டிருக்கும் சீமான், வடிவேலுவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது காமெடி புயலை கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்திருக்கிறார் சீமான்.