ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பேராண்மை படத்தை அடுத்து புறம்போக்கு என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.பி.ஜனநாதன். இந்தப் படத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். புறம்போக்கு படத்தில் ஷாம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மெக்காலே. சட்டத்தை மதிக்கும் போலீஸ் அதிகாரி வேடமாம். சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று நம்புகிறவர். அதன்படி நடக்கிறவர். இந்தப் படத்தில் ஷாமுக்கு ஜோடியாக நடிப்பவர் ஒரு வெளிநாட்டுப் பெண். போலீஸ் கனவில் மெக்காலே லண்டன் போய் படித்து வந்தவர். எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டும் என்று விரும்புகிற பிடிவாதம் உள்ளவர். எத்தனையோ போலீஸ் அதிகாரிகளைப் பார்த்திருப்போம். இதுவழக்கம் போலில்லையாம். இவரது கதாபாத்திரத்தை புதிய பரிமாணத்தில் டைரக்டர் ஜனநாதன் உருவாக்கியிருக்கிறாராம். ஸ்டைலிஷாகவும் இருக்குமாம்.
ஷாம் சட்டத்தை மதிக்கிற கதாபாத்திரம் என்றால் ஆர்யா சட்டத்தை மிதிக்கிறவர். இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி. ஷாம், ஆர்யா இரண்டு பேருடனும் தொடர்பில் இருப்பவராம். புறம்போக்கு படத்தில் 3பேரின் பாத்திரங்களும் 3 மாதிரியாக, அதாவது ஒன்றுக்கொன்று பொருந்தாத தனியான குணம் கொண்டவையாக இருக்குமாம். புறம்போக்கு படத்தில் 3 ஹீரோக்கள் என்பதால் 3 பேருக்கும் முக்கியத்துவம் இருப்பதுபோல், பேலன்ஸ் செய்து காட்சிகள் வைத்திருக்கிறாராம் இயக்குநர்.