டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
யசோதா படத்தை அடுத்து தற்போது சாகுந்தலம் என்ற படத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் குறித்து அவர் கூறுகையில், இந்த சாகுந்தலம் படத்தின் கதையை இயக்குனர் என்னிடத்தில் சொன்னபோது அதில் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். காரணம் சாகுந்தலம் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு பயமாக இருந்தது. எனக்குள் அந்த கம்பீரம், தேஜஸ் இருக்காது என்று நினைத்தேன். என்றாலும் இயக்குனர் என்னை வற்புறுத்தி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதோடு எனது கதாபாத்திரம் எதிர்பார்த்தது போலவே சிறப்பாக வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நம்மால் நடிக்க முடியாது என்ற பயம் எனக்குள் ஏற்பட்டாலும், அந்த கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்றும் நான் எனக்குள் ஒரு முடிவு செய்து கொள்வேன். என்னுடைய பயத்தை தாண்டி வெற்றி பெற முயற்சி செய்வேன். என்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்களில் இப்படித்தான் நான் செயல்பட்டு வந்திருக்கிறேன். ஒரு நடிகையாக எனது முன்னேற்றத்திற்கு காரணமே இந்த பயம்தான் என்றும் தெரிவித்திருக்கிறார் சமந்தா.