‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் இயக்குனர் ஆனவர் அவரது இளைய மகள் சவுந்தர்யா. அதையடுத்து தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருந்தார். மேலும் இரண்டாவதாக விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்து வரும் சவுந்தர்யா, நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கணவர் விசாகன், மகன் வேத் கிருஷ்ணா ஆகியோருடன் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அவர்களுக்கு அந்த கோவிலில் உள்ள சண்முகா விலாசத்தில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு திருச்செந்தூர் கடலில் கால் நனைத்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்னை திரும்பி இருக்கிறார்கள்.