ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
போக்கிரி படத்தில் நடித்தபோது விஜய்யுடன் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்னை காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக அவரிடத்தில் பேச்சு வார்த்தையே இல்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் நெப்போலியன். சமீபகாலமாக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட அவர் தற்போது தான் அளித்துள்ள ஒரு பேட்டியில், போக்கிரி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த போது ஒரு சம்பவம் நடந்தது. அதன் காரணமாக அப்போதில் இருந்து நானும், விஜய்யும் பேசிக் கொள்வதில்லை.
அவர் நடித்த படங்களையும் நான் பார்ப்பதில்லை. ஆனால் மீண்டும் விஜய்யுடன் பேசுவதற்கு நடிப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். என்றாலும் அவர் என்னுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். காரணம் அவர் தனது தாய் தந்தையர் இடத்திலேயே பேசாமல் இருக்கிறார். அமெரிக்கா வரை அந்த செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் முதலில் விஜய் தனது அப்பா அம்மாவுடன் சமரசமாகட்டும். மேலும் எனக்கும் விஜய்க்கும் மோதல் ஏற்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவ்வளவு இடைவெளிக்கு பிறகு அவர் என்னுடன் மீண்டும் பேச தயாராக இருப்பாரா என்று தெரியவில்லை என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகர் நெப்போலியன்.