'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தற்போது அருண் மாதேஸ்வரன் டைரக்ஷனில் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தை தொடர்ந்து அவரது திரையுலக பயணத்தில் மைல்கல்லாக அமைய இருக்கும் ஐம்பதாவது படத்தை அவரே இயக்குகிறார் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. கேங்ஸ்டர் பாணியில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ராயன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் பட இயக்குனரான மித்ரன் ஜவஹரும் இணைந்துள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆம்.. இந்த படத்தின் கதை விவாதத்தில் தான் தனுசுடன் இணைந்து பணியாற்றுகிறாராம் மித்ரன் ஜவஹர். தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகி அதைத்தொடர்ந்து அவரை வைத்து குட்டி, உத்தமபுத்திரன் என அடுத்தடுத்த படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் தனுஷுடன் நான்காவது முறையாக இணைந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தனுஷின் ஐம்பதாவது படத்தில் இவர் தனுஷுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.