ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ‛‛திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்ததால் தான் இன்னமும் தமிழ்நாடு மதச்சார்பற்ற மாநிலமாக உள்ளது. தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள். ராஜராஜ சோழனை இந்துவாக அடையாள படுத்துகிறார்கள்'' என்றார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு இதுதொடர்பாக கூறுகையில், ‛‛ராஜராஜ சோழன் இந்து இல்லையென்றால் வேறு என்ன கிறிஸ்துவரா இல்ல இஸ்லாமியரா. உலகத்திலேயே இந்தியா சிறந்த நாடாக திகழ்கிறது. அதேபோல்தான் சைவம், வைணவம் உள்ளிட்ட அனைத்தும் இந்திய மதங்களும். இதையே இந்து என்றார்கள். உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள். நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை'' என்றார்.