Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி

18 ஆக, 2022 - 15:42 IST
எழுத்தின் அளவு:
Soori-workship-at-Rameshwaram-temple

காமெடி நடிகரான சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் ஹீரோவாகி இருக்கிறார். கடந்தவாரம் கார்த்தி நடித்து வெளியாகியுள்ள விருமன் படத்தில் காமெடியனாக நடித்திருந்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது ஆயிரம் கோவில் கட்டுவதை விட, அன்னச்சத்திரம் கட்டுவதை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவதே சிறந்தது என்று பேசினார். அவரது இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகள் மத்தியில் இருந்து கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. இதன் பிறகு நான் இந்து கடவுளுக்கு எதிரானவன் கிடையாது. மதுரை மீனாட்சி அம்மனின் பெரிய பக்தன். எந்த வேலையை செய்தாலும் கடவுளை வணங்கி விட்டு தான் ஆரம்பிப்பேன் என்று சொல்லி அதை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூரி. அதையடுத்து சுதந்திர தின விழாவின்போது மாப்பு குச்சியில் தேசிய கொடியை ஏற்றி விமர்சனங்களுக்கு உள்ளானார் சூரி. இந்த நிலையில் தற்போது தனது குடும்பத்தாருடன் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்திருக்கிறார் சூரி. அதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ்திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் ... வருகிறான் ‛சோழா சோழா' வருகிறான் ‛சோழா சோழா'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20 ஆக, 2022 - 05:33 Report Abuse
NicoleThomson கர்த்தரே கர்த்தரே என்று ஒவ்வொரு சினிமாவிலும் இவர் செல்லுகையில் சரி அண்ணனும் மதமாரி விட்டார் என்று நினைத்தேன் . இங்கயும் இல்லாம அங்கேயும் இல்லாம நடுவில் இருக்கும் செக்யுலர்?
Rate this:
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
19 ஆக, 2022 - 15:35 Report Abuse
Krishnamurthy Venkatesan அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற பாரதியின் வரிகளைதானே சொல்லியிருக்கிறார்.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
19 ஆக, 2022 - 14:04 Report Abuse
Bhaskaran Vaththigaan pogalaam
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
19 ஆக, 2022 - 06:26 Report Abuse
Indhuindian எந்த காரியம் ஆரம்பிக்கும் முன்னாடி சாமிய கும்புடுவேன் ஏன்னா காரியம் நல்ல படியா முடியானும் ஆனா வெளியில வந்த சாமியா திட்டுவேன் ஏன்னா அப்பதான் என்னை பாத்து சிரிப்பாங்க காசு வரும் தெரியுமா சொன்னாங்க காசேதான் கடவுளடா
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
19 ஆக, 2022 - 06:24 Report Abuse
Indhuindian ye
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in