தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் சுழல் வெப் தொடர் மற்றும் தியேட்டர்களில் வெளியாகி உள்ள ராக்கெட்ரி படத்தில் சாம் சி.எஸ்சின் பின்னணி இசை குறித்து பரவலாக பேசப்படுகிறது.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் பல ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தாலும் பின்னணி இசை பற்றி பேசப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அமைகிற படம் எல்லமே கொலை, கொள்ளை நிறைந்த டார்க் ஜானர் படங்களாக இருக்கிறது. அவற்றில் பாடல்களை விட பின்னணி இசைக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும்.
ஆனால் பாடலின் வெற்றியின் மூலமே ஒரு இசை அமைப்பாளர் கவனிக்கப்படுகிறார், கொண்டாடப்படுகிறார் என்பதுதான் இன்றையநிலை. அந்த வகையில் எனக்கு வருத்தம் உண்டு. இப்போதுள்ள நவீன டெக்னாலஜியை கொண்டு ஒரு உருப்படாத பாடலை கூட 50 லட்சம் வரை செலவு செய்து செயற்கையாக ஹிட்டாக்கி விட முடியும். அதை செய்ய நான் தயாராக இல்லை. பாடலுக்கான வாய்ப்புகள் வரும்போது நானும் கொண்டாடப்படுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் சாம் சி.எஸ்.