ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
பாகுபலி மற்றும் சாஹோ படங்களின் உலகளாவிய வெளியீட்டிற்குப் பிறகு பிரபாஸின் கேரியர் கிராப் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் உயர்ந்திருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தியின்படி பிரபாஸ் ஒரு மாருதியுடன் ஹாரர் காமெடி படத்தில் நடிக்கப் போகிறார். மேலும் தற்போது கைவசம் 8 படங்கள் உள்ளன. அவரது சமீபத்திய படமான ராதேஷ்யாம் காதல் கதையிலும், ஆதி புருஷ் புராண கதையிலும், சலார் ஆக்சன் கதையிலும் உருவாகியுள்ள இப்படங்கள் 2022ல் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.
மேலும் நான் அஷ்வினுடன் பிராஜெக்ட் கே. இந்தப்படத்தில் அறிவியல் புனைகதை மற்றும் எதிர்காலம் குறித்த கதையில் நடிக்கிறார். அதையடுத்து சந்தீப் ரெட்டி வங்காவுடன் ஸ்பிரிட் என்ற ஆக்சன் படத்திலும், இயக்குனர் சித்தார்த் ஆனந்துடன் ஒரு படத்திலும், தில் ராஜூ தயாரிப்பில் மற்றொரு படத்திலும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அந்த வகையில் அடுத்த மூன்று வருடங்களுக்கு தற்போது பிரபாஸ் புக் ஆகி விட்டார்.