பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தை பிரச்னை காரணமாக பாதியிலேயே நிறுத்திவிட்டு தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி நடந்தது. தற்போது கொரானோ தொற்று பரவல் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் தியேட்டர் உரிமை அல்லாத டிஜிட்டல் உரிமை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் வெளிவந்த பின் ராம்சரண் பான்-இந்தியா ஸ்டார் ஆக உயரும் வாய்ப்புகள் அதிகம். அவருடைய அடுத்த படத்தின் இயக்குனர் ஷங்கர் என்பதால் அந்தப் படமும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஜீ 5 ஓடிடி நிறுவனம் சார்பில் டிஜிட்டல் உரிமை 200 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஷங்கர், ரஜினிகாந்த் இணைந்த '2.0' படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ 5 நிறுவனம் 110 கோடி கொடுத்து வாங்கியிருந்தது. ஷங்கரின் அடுத்த படத்தின் டிஜிட்டல் உரிமை சுமார் இரண்டு மடங்கு அதிகமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.